​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது - சுகாதாரத் துறை

Published : Apr 09, 2022 3:08 PM

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது - சுகாதாரத் துறை

Apr 09, 2022 3:08 PM

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதன் மூலம், சுமார் 4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.