​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடும்பத் தகராறில் மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது

Published : Apr 09, 2022 3:01 PM



குடும்பத் தகராறில் மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது

Apr 09, 2022 3:01 PM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை அழைத்துவரச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டான்.

தேவகோட்டை தான்சா ஊரணியைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டு, சித்தானூரிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார் செல்வி.

நேற்றிரவு மனைவியை அழைத்து வருவதற்காக பாலமுருகன் சென்றபோது, மகளை காலையில் அனுப்பி வைப்பதாக செல்வியின் தந்தை பூமிநாதன் கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூமிநாதனை சரமாரியாகக் குத்தியுள்ளான் பாலமுருகன்.

தடுக்க முயன்ற செல்விக்கும் அவரது தாயாருக்கும் கத்திக் குத்து விழுந்த நிலையில், பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.