​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் பூவாய் அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா.!

Published : Apr 09, 2022 2:08 PM



சேலத்தில் பூவாய் அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா.!

Apr 09, 2022 2:08 PM

சேலம் மாவட்டம் மல்லூரில் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஆண்ட்ரியாவை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் உள்ள பூவாய் அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.

அப்போது அவரை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் ஆண்ட்ரியா பாடல்கள் பாடிய நிலையில் அவரை நடனமாட ரசிகர்கள் வற்புறுத்தியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.