​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு தனியாரை ஊக்குவிக்க நிதி ஒதுக்கியது மத்திய அரசு

Published : Apr 09, 2022 8:52 AM

பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு தனியாரை ஊக்குவிக்க நிதி ஒதுக்கியது மத்திய அரசு

Apr 09, 2022 8:52 AM

பாதுகாப்பு தளவாட சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில், கொள்முதல்  நிதியில் இருந்து 25 சதவீதத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட தொகை  ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயாகும். பாதுகாப்பு சாதனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதையும், உற்பத்தியில் தனியார் துறையை பங்கேற்பதை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனது பட்ஜெட்டில் 25 சதவீதம் அல்லது 21 ஆயிரத்து 149 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.