​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

Published : Apr 08, 2022 7:21 PM

நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

Apr 08, 2022 7:21 PM

நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என்றார்.

நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் அரவை திறனுடன் கூடிய ஆறு ஆலைகள் அரசு - தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், நெல்லினை திறந்த வெளியில் சேமிக்காமல் அரவை ஆலைகளுக்கே அனுப்பி வைக்கும் நடைமுறையை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.