​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
70 வயது மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. வீட்டின் கேட்டிற்குள் புகுந்து கைவரிசை

Published : Apr 08, 2022 5:09 PM

70 வயது மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. வீட்டின் கேட்டிற்குள் புகுந்து கைவரிசை

Apr 08, 2022 5:09 PM

திருப்பத்தரில் இரவில் மூதாட்டி ஒருவரின் வீட்டு வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. 

வாணியம்பாடி ஜனதபுரம் பகுதியில் வீட்டை ஒட்டியுள்ள கடையை பூட்டிவிட்டு வீட்டின் கேட்டிற்குள் தன் பேரனுடன் ஆதிலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி மெதுவாக நடந்து செல்வதும், அந்த தருணத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களில் ஒருவன், வீட்டு வாசலில் வைத்து ஆதிலட்சுமியின் 3 சவரன் சங்கிலியை பறித்துவிட்டு பைக்கில் ஏறி தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.