​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்.. இடிபாடுகளில் இருந்து 26 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தகவல்

Published : Apr 08, 2022 4:27 PM

ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்.. இடிபாடுகளில் இருந்து 26 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தகவல்

Apr 08, 2022 4:27 PM

உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்கு அருகேயுள்ள போரோடியங்கா நகரில், ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கும் அடுக்குமாடி கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து 26 சடலங்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து பதிவிட்ட உக்ரைன் வழக்கறிஞர் ஒருவர்,  இன்னும் எத்தனை பேர் இவ்வாறு இறந்திருப்பார்கள் என்பதை கணிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் ராணுவ தளம் ஏதும் இல்லாத நிலையில், பொதுமக்களை குறிவைத்தே ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அப்பாவி மக்களை ரஷ்ய படைகள் சித்தரவதை செய்து கொலை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போரோடியங்காவில் ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்