​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 35 பேர் பலி

Published : Apr 08, 2022 4:08 PM

கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 35 பேர் பலி

Apr 08, 2022 4:08 PM

கிழக்கு உக்ரைனில் கிராமட்டோர்ஸ்க் ரயில் முனையத்தின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமட்டோர்ஸ்க் நகரின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ராணுவம் இரண்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் அங்குத் தஞ்சமடைந்திருந்த மக்களில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளரை மேற்கோள் காட்டி ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.