​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சிட்னி நகர்.. மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

Published : Apr 08, 2022 3:14 PM

தொடர் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சிட்னி நகர்.. மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

Apr 08, 2022 3:14 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

சிட்னி நகரில் கடந்த 6 வாரங்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு மாதம் முழுதும் பெய்ய வேண்டிய மழை புதன்கிழமை ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்தது.

நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 4,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.