​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜல்லிக்கட்டு போட்டிக்காக டோக்கன் பெற முண்டியடித்த பொதுமக்கள்.. தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்..

Published : Apr 08, 2022 1:11 PM

ஜல்லிக்கட்டு போட்டிக்காக டோக்கன் பெற முண்டியடித்த பொதுமக்கள்.. தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்..

Apr 08, 2022 1:11 PM

மதுரை மாவட்டம் கரடிக்கல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க டோக்கன் பெற முண்டியடித்தவர்களால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சுந்தர்ராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில், ஏராளமான மாடுபிடி வீரர்களும் காளைகளின் உரிமையாளர்களும் முன்பதிவு செய்யும் இடத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு டோக்கன் பெற முயன்றவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதே நேரம் இளைஞர்கள் சிலர் கட்டிடங்கள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.