அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துக் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பூவிருந்தவல்லி தொகுதியில் புதிய அரசு கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? எனச் சட்டப்பேரவையில் உறுப்பினர் கிருஷ்ணசாமி வினவினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, பூவிருந்தவல்லி தொகுதியில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியும் உள்ளதாகத் தெரிவித்தார்.