​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் யானைக்கு உணவளிக்க வந்த சிறுவனைத் தும்பிக்கையால் சுற்றி வளைத்த யானை.!

Published : Apr 08, 2022 12:54 PM



கேரளாவில் யானைக்கு உணவளிக்க வந்த சிறுவனைத் தும்பிக்கையால் சுற்றி வளைத்த யானை.!

Apr 08, 2022 12:54 PM

கேரள மாநிலத்தில், யானையின் தும்பிக்கையில் சிக்கிய 4 வயது சிறுவனை அவனது தந்தை காப்பாற்றிய காணொளி இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

மலப்புரத்தில், நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவளிக்க சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்றுள்ளான். சிறுவன் உணவளித்த போது திடீரென மிரண்ட யானை அவனை தும்பிக்கையால் சுற்றி வளைத்தது.

பதறிப்போன சிறுவனின் தந்தை யானையின் தும்பிக்கையில் சிக்கிய சிறுவனை பிடுங்கிக் கொண்டு ஓடி வந்தார். 6 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காணொளி தற்போது வைரல் ஆகி உள்ளது.