​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை தமிழர்கள் மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை.!

Published : Apr 08, 2022 12:47 PM

இலங்கை தமிழர்கள் மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை.!

Apr 08, 2022 12:47 PM

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

இலங்கையில் பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதனால் சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்ட நிலையில், கடந்த மாதம் அகதிகளாக வந்த 16 தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து 2 வயது மகன், 10 வயது மகளுடன் வெளியேறிய தம்பதி, பைபர் படகு மூலம் அதிகாலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.

அவர்களை மீட்ட மெரைன் போலீசார், விசாரணைக்கு பின் அவர்கள் 4 பேரும் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.