​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மது போதையில் பேரிகார்டு மீது ஆட்டோவை மோதிய ஓட்டுநர்.. நடைபாதையில் சென்ற பெண் தலை நசுங்கி உயிரிழப்பு..

Published : Apr 08, 2022 12:42 PM



மது போதையில் பேரிகார்டு மீது ஆட்டோவை மோதிய ஓட்டுநர்.. நடைபாதையில் சென்ற பெண் தலை நசுங்கி உயிரிழப்பு..

Apr 08, 2022 12:42 PM

திருச்சியில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில், நடைபாதையில் சென்ற பெண்மணி தலை நசுங்கி உயிரிழந்தார்.

ஸ்ரீரங்கத்தில், ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, சாலையில் இருந்த பேரிகார்டில் மோதி கவிழ்ந்தது.

சாலையில் திடீரென பேரிகார்டு கவிழ்ந்ததால், எதிர்திசையில் பிரதீப் குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் செல்லும் நடைபாதை மீது ஏறியது.

அப்போது ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த ராதா என்ற 60 வயது பெண்மணி மீது ஆட்டோ மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

பேரிகார்டு மீது ஆட்டோவை மோதிய ஹரிஹரன் மது போதையில் ஆட்டோ ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது. போதையில் ஆட்டோ ஓட்டிய ஹரிஹரன், நடைபாதியில் சென்ற பெண்மணி மீது ஆட்டோவை ஏற்றிய பிரதீப் குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.