​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர் - சிபிஐ

Published : Apr 08, 2022 12:40 PM



ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர் - சிபிஐ

Apr 08, 2022 12:40 PM

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அவர்கள் இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள சிபிஐ,  அவ்வழக்கில் கைதாகியுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

நீதிபதி முரளிசங்கர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களைக் காப்பாற்றவே என்றும் ஆனால் இந்த வழக்கில் தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரகுகணேஷுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சிபிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.