​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Published : Apr 08, 2022 10:50 AM

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Apr 08, 2022 10:50 AM

அதிமுக பொதுச்செயலாளராக உரிமைக் கோரி வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கூடுதல் உரிமையியல் நீதிபதி இன்று விடுமுறை என்பதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.