கேரளாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களான, முகக் கவசங்களை அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன .தற்போது 2 ஆயிரத்து 398 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.