​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிலில் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் ஆத்திரம்-பெற்ற மகனையே தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர தந்தை..!

Published : Apr 07, 2022 8:37 PM



தொழிலில் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் ஆத்திரம்-பெற்ற மகனையே தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர தந்தை..!

Apr 07, 2022 8:37 PM

பெங்களூருவில், தொழிலில் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறித்து கணக்கு கேட்ட போது சரியாக பதிலளிக்காத மகனை, தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசாத் நகரில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள சுரேந்திரன், தனது நிறுவனத்தில் ஒன்றரை கோடி நஷ்டம் ஏற்பட்டதால், நிறுவனத்தை கவனித்து வந்த தனது மகன் அர்பித்துவிடம் கணக்கு கேட்டுள்ளார். அதற்கு அர்பித் சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் இரக்கமின்றி பெற்ற மகன் என்றும் பார்க்காமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டார். வேதனை தாங்க முடியால் அர்பித் ஓடிய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

தீக்காயம் ஏற்பட்ட அர்பித் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேந்திரனை கைது செய்தனர்.