​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் 24 அமைச்சர்கள் ராஜினாமா..!

Published : Apr 07, 2022 8:25 PM

ஆந்திராவில் 24 அமைச்சர்கள் ராஜினாமா..!

Apr 07, 2022 8:25 PM

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதை அடுத்து, அமைச்சர்கள் 24 பேரும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை, முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் அளித்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு பதவி ஏற்ற நிலையில், 34 மாதங்களுக்குப் பின் அமைச்சரவை மாற்றப்பட இருக்கிறது. வருகிற 11 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய அமைச்சரவையிலும் அனைத்து சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 5 துணை முதலமைச்சர்கள், 3 பெண் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.