​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாநகராட்சி பள்ளியில் மின் கசிவால் தீ விபத்து.. தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்த ஆசிரியைகள், மாணவர்கள்

Published : Apr 07, 2022 6:31 PM

சென்னை மாநகராட்சி பள்ளியில் மின் கசிவால் தீ விபத்து.. தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்த ஆசிரியைகள், மாணவர்கள்

Apr 07, 2022 6:31 PM

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை ஆசிரியைகளும், மாணவர்களும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

450 மாணவ மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் போது திடீரென 2வது தளத்தில் இருந்து கரும்புகை வரத் தொடங்கியுள்ளது.

பள்ளி வளாகத்தில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் ஒருசில ஆசிரியைகளும், மாணவர்களும் வாளிகளில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் துரிதமாக செயல்பட்ட ஆசிரியைகளுக்கும், மாணவர்களுக்கும் தீயணைப்புத்துறையின் இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்த தீயில் புத்தகப்பைகளை பறிகொடுத்த 28 மாணவர்களுக்கு அவர் புதிய பைகளை வழங்கினார்.