​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.100-க்கு 25 சதவீத பெட்ரோலை மட்டுமே நிரப்புவதாக பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்

Published : Apr 07, 2022 1:16 PM

ரூ.100-க்கு 25 சதவீத பெட்ரோலை மட்டுமே நிரப்புவதாக பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்

Apr 07, 2022 1:16 PM

திருவாரூரில் 100 ரூபாய்க்கு, வெறும் 25 சதவீத பெட்ரோலை மட்டுமே நிரப்பி ஏமாற்றிவருதாக கூறி தனியார் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்ற சிறிது தூரத்திலேயே அவரது வாகனம் நின்றதாகவும், மெக்கானிக் ஷெட்டில் கேட்டபோது பெட்ரோல் இல்லாததாலேயே வண்டி நின்றதாக ஊழியர்கள் கூறியதாக தெரிவித்தார்.

இதேபோன்று தங்கள் வண்டியும் பாதியில் நின்று விட்டதாக கூறி மேலும் சில பெண் வாடிக்கையாளர்களும் காலையில் அந்த பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.