தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை

0 651

அதிமுக வளர்ச்சி பணி, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று 14 மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கின்றனர்.

இந்தக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

எஞ்சிய நிர்வாகிகள் கூட்டம் வரும் நாட்களில் நடக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments