ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதம்

0 1159

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விளாங்காட்டூரில் உள்ள முருகனேஷ் என்பவருக்கு சொந்தமான நல்லாதாள் ஸ்பின்னிங் மில்லில் இன்று பிற்பகலில் திடீரென பற்றிய தீ மளமளவென்று பரவியது. தகவலின்பேரில் பள்ளிபாளையம், சங்ககிரி பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள், தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீவிபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமானது. இவற்றின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக ஆலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments