மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை - ஓ.எஸ்.மணியன்

0 1540

சந்தேகப்படுபவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகவும், மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் பேருந்து பணிமனையில் ஊழியர்களுக்கான புதிய ஓய்வறை கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்ட திருத்தத்தால், இஸ்லாமியர்களுக்கு துளிகூட பாதிப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் அவர்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments