குற்றவாளிகளுக்கு 7 நாள் கெடு... நிர்பயா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு...!

0 1471

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும்  தனித்தனியாக  மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த அவர்களுக்கு 7 நாள்  கெடு விதித்துள்ளது.

நிர்பயா பாலியல் கொலைவழக்கு கைதிகள் 4 பேருக்கும், கடந்த ஒன்றாம் தேதி  தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்து, டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜனவரி 31 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதின்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் (Suresh Kumar Kait) அடுத்த 7 நாட்களுக்குள் சட்டரீதியாக உள்ள அனைத்து நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார். 7 நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அதிகாரிகள் சட்டரீதியாக தமது கடமையைச் செய்யலாம் என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி விசாரணை நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்து விட்ட அவர், முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோர் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திவிட்டதால், அவர்கள் இருவரையும் மட்டுமாவது முதலில் தூக்கில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். அரசியலமைப்புச் சட்ட பிரிவு 21 ன் படி இறுதி மூச்சு நிற்கும் வரை தம்மை காப்பாற்றிக் கொள்ளும் உரிமை இந்த குற்றவாளிகளுக்கு இருப்பதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments