எல்லையில் தொடர்ந்து அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபடும் பாக். ராணுவம்

0 689

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்தாண்டு மே மாதம் முதல், கடந்த மாதம் வரையில், 2,335 முறை, இந்திய ராணுவ நிலைகளையும், பொதுமக்களையும் குறிவைத்து, தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக்((Shripad Naik)), திங்கட்கிழமையன்று, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது.

கடந்தாண்டு மே மாதம் 30ஆம் தேதி முதல், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரையில், பாகிஸ்தான் ராணுவம், 2,335 முறை, அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, 177 முறை, எல்லைத் தாண்டிய துப்பாக்கிச்சூட்டையும், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தியிருப்பதாகவும், பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments