2ஆம் நிலை காவலர் பணி.. தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு பாதிப்பு

0 1120

சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் இடையேயான தகவல் பறிமாற்ற பிரச்சினையால், 2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சீருடை பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்ட தேர்வர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில், தாங்கள் சமர்ப்பித்த பல்கலைக்கழக அளவில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கான ஃபார்ம்-3 சான்றிதழ்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் இறுதி ஒப்புதல் அளிக்கப்படாததால், நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விசாரித்தபோது, ஃபார்ம்-1, ஃபார்ம்-2 சான்றிதழ்களை மட்டுமே சரிபார்க்குமாறும், ஃபார்ம்-3 பற்றி டி.என்.யூ.எஸ்.ஆர்.பி அதிகாரிகள் எதுவும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments