சொத்துவரி செலுத்தாத சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்து நோட்டீஸ்

0 1419

சொத்துவரி செலுத்தாத சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

 நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் கடந்த நான்கரை ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தவில்லை என்றும், 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாய் நிலுவைத்தொகை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்து நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அதிகாரிகள், ரூபாய் 75 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத தியாகராய நகரில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைக்குப்பின்பும் நிலுவைத் தொகையை செலுத்த தவறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments