அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் : பிரதமர் மோடி

0 1024

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக கூறினார்.

மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டும் குறியாக இருக்காமல், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments