டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு...

0 1055

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென போராட்டம் நடைபெற்ற இடத்தை நோக்கி, கையில் ரிவால்வருடன் வந்த நபர், போராட்டக்காரர்களை நோக்கி கூச்சல் போட்டுள்ளார்.

அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை அமைதிப்படுத்தி, துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

சுதந்திரம் கேட்பவர்களுக்கு இதோ சுதந்திரம் என்று எச்சரித்தபடியே துப்பாக்கி ஏந்திய நபர் நடந்துசெல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.பின்னர் அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments