U19 உலக கோப்பையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி..!

0 787

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 62 ரன்களும், அதர்வா 55 ரன்களும் விளாசினர்.

அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியினர், இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 3 பேர் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 159 ரன்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக பேஃனிங் ((fanning)) மட்டும் 75 ரன்கள் அடித்தார். இந்தியா அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த கார்த்திக் தியாகி ((kartik tyagi)) ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments