பரனூர் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!

0 1258

செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் சென்னை - திருச்சி சென்ற அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், வசூல் மையம், சி.சி.டி.வி. கேமரா, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.imageஇந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா, பேருந்து ஓட்டுனர் நாராயணன், நடத்துனர் பசும்பொன் முடியரசன், செங்கல்பட்டைச் சேர்ந்த முத்து ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.imageஇதனிடையே உடைக்கப்பட்ட கணினி உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டியிருபபதால் ஒரு வாரத்துக்கு வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments