ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்விலும் முறைகேடு என புகார்

0 992

TNPSC நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்துள்ளனர். குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வு முடிவில், இனவாரியான ஒதுக்கீடு அடிப்படையில் அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் விடுபட்டு இருப்பதாகவும், தகுதி நிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை தேர்வு செய்து பட்டியலில் இடம்பெற செய்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments