இந்திய அணியின் அகராதியில் "நான்" என்பது இல்லை.. "நாங்கள்" மட்டுமே.. ரவி சாஸ்திரி பெருமிதம்

0 1188

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையை வெல்வதே, தற்போதைய ஒரே லட்சியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ரவிசாஸ்திரி, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள 6 ஒருநாள் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்க உள்ள , டி 20 உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தகளமாகவே பார்க்கப்படும் என்றார்.

உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எப்போதுமே எங்கள் மனதிலும், சிந்தனையிலும் இருக்கும். அதுவே எங்கள் லட்சியம் என கூறியுள்ளார். இந்திய அணி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள அவர், எங்களை பொறுத்தவரை "நான்" என்ற சொல் அகராதியிலேயே இல்லை. "நாங்கள்" என்ற சொல் மட்டுமே இந்திய அணியில் உண்டு.

ஏனென்றால் இது வெற்றி பெறும் அணி. அதனால் தான் ஒருவரின் சாதனைகளை மற்ற வீரர்கள்கொண்டாடி மகிழ்கிறார்கள். வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றி, இந்திய அணியின் மன உறுதியை பிரதிபலிக்கிறது. துணிச்சலான கிரிக்கெட்டை விளையாட இந்திய அணி அஞ்சாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments