டெல்லி சட்டமன்ற தேர்தல்: நேற்று மனுத்தாக்கலை தவறவிட்ட நிலையில் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல்

0 581

நீண்ட நேரம் பேரணி நடத்தியதால் நேற்று வேட்புமனுத்தாக்கலை தவறவிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீண்ட நேரம் காத்திருந்து மனுத்தாக்கல் செய்தார்.

நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக புறப்பட்டு சென்றார். ஆனால் அதிகமான கூட்டத்தால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அவர் நேற்று மனுதாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று அவர் காலையிலேயே சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று அவர் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே சென்றார். அவருக்கு முன் 44 பேர் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்திருந்தால், 45 வது ஆளாக அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சுனில் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் ரமேஷ் சபர்வால் களத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments