படேல் போராட்டக்குழு தலைவர் ஹார்திக் படேல் கைது
தேசத் துரோக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்த காரணத்தினால் படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக ஹார்திக் படேல் மீது போலீஸாரால் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் ஹார்திக் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. இதன்படி, விரம்காம் பகுதி அருகே இருந்த ஹார்திக் படேலை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.
Comments