ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 11 வீரர்கள் காயம் என தகவல்

0 715

ராணுவ தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 11 வீரர்கள் காயமுற்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 3 ஆம் தேதி, ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி காஸிம் சுலைமானி மற்றும் அவருடன் இருந்த 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, கடந்த 8 ஆம் தேதி, ஈராக் அல் ஆசாத் அமெரிக்க விமானப் படைத் தளம் மீது ஈரான் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் தனது வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கூறி வந்த நிலையில், தாக்குதலில், அதிர்ச்சி மற்றும் உள்காயம் அடைந்த 11 வீரர்களுக்கு ஜெர்மனி மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதன் மத்திய கமாண்ட் செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் ((Captain Bill Urban)) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments