காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமேசான் CEO

0 11249

இந்தியா வந்துள்ள அமேசான் நிறுவன சி.இ.ஓ., ஜெப் பெசோஸ், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரும், முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானின் சி.இ.ஓவுமான ஜெப் , 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட் சென்ற அவர், அங்குள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உலகத்தின் போக்கையே மாற்றிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது, சிறப்பான தருணமாக இருந்ததாகவும் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments