இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் திருட்டு - 4 பேர் கைது

0 938

சென்னை பள்ளிக்கரணையில், ஒன்றரை டன் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களை திருடிய 4 பேரை, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

கீழ்கட்டளை எஸ்டேட் பகுதியில், ரவிக்குமார் என்பவர் நடத்திவரும் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவத்தில், நுழைந்த 4 பேர் ஒன்றரை டன் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், மணிகண்டன், முருகன், ஹரி உள்ளிட்ட 4 பேர் அதே பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றபோது, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments