அண்ணா பல்கலை இரண்டாக பிரிக்கும் பட்சத்தில் புதிய பெயர் சூட்டுவது குறித்து ஆளுநருக்கு கடிதம்

0 953

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் பட்சத்தில், புதிதாக உருவாகும் பல்கலைக்கழகத்துக்கு பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக புதிய பெயரை சூட்டவேண்டும் என தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பினர் தமிழக ஆளுநரை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ள அக்கூட்டமைப்பினர், பெங்களூரு மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவான பல்கலைக்கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.

அத்துடன், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Watch More ON : https://bit.ly/35lSHIO

Also Read :TANCETநுழைவுத் தேர்வுக்கு வரும் 31 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments