தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

0 633

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தஞ்சையை சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.

அதில் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், ரவீந்திரன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments