டெல்லி வடகிழக்கு பகுதி வன்முறை சம்பவம் - 2 வங்கதேசத்தினர் உள்பட 5 பேர் கைது

0 716

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது மூண்ட வன்முறை தொடர்பாக வங்கதேசத்தினர் 2 பேர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீமாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் டிசம்பர் 20ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், கும்பல் ஒன்று  போலீஸாரின் வாகனங்கள் மீதும், போலீஸார் மீதும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்பு படை போலீஸார், வன்முறை சம்பவங்களில் வங்கதேசத்தை சேர்ந்த 15 பேருக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி,  வங்கதேசத்தினர் 2 பேரையும், டெல்லி மற்றும் உத்தரப் பிரசதேசத்தை சேர்ந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments