அதிபர் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி டாலர் பரிசு என ஈரான் அறிவிப்பு

0 1827

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலரை பரிசு வழங்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது.

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவர் காசிம் சுலைமானி உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயமும் வளைகுடா நாடுகளில் பதற்றமும் நிலவுகிறது.

இந்த நிலையில் காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலம் அந்நாட்டின் அதிகாரப்பூரவ தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. அப்போது தொலைக்காட்சியில் பேசிய ஈரான் மூத்த அதிகாரி ஒருவர், ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு, ஒவ்வொரு ஈரானியர் சார்பாக தலா 1 அமெரிக்கா டாலர் வீதம், 8 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்காக ஈரான் குடிமக்கள் அனைவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த கூடிய சக்தி எங்களிடம் உள்ளது. அதற்கான சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம் என ஈரான் அதிபர் எச்சரித்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments