ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 551

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிசந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்பு தர இயலாது என்று கூறி விடுப்பு வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு சாதாரண விடுப்பில் சென்றபோது எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்பதை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், ஜனவரி 10 முதல் 25ஆம் தேதி வரை 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments