பாத்ரூம் ஜன்னலை திறந்து கொள்ளை.. 3 மாதங்களில் 2ஆவது சம்பவம்..!

0 925

சென்னை அம்பத்தூர் அருகே, பூட்டியிருந்த அடுக்குமாடி வீட்டின் பாத்ரூம் ஜன்னலை திறந்து, 80 சவரன் தங்கம், வைரம், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே அடுக்குமாடி குடியிருப்பில், 3 மாதங்களுக்குள், இரண்டாவது முறையாக, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயிலில், விஜிஎன் நிறுவன அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், 2ஆவது தளத்தில் வீடு ஒன்றில், வைஜெயந்திமாலா என்பவர் வசித்து வருகிறார்.

இவரது கணவர் துபாயில் பணியாற்றும் நிலையில், அண்மையில், பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்ற வைஜெயந்திமாலா, நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிலிருந்த பணம், நகை, வைரம் உள்ளிட்டவை கொள்ளை போனதை அறிந்து, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில், சூரிய ஒளி உட்புகாமல் இருக்க அமைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சீட்டை கழற்றி, அதிலிருந்து, பக்கவாட்டு பைப் வழியாக கீழே கொள்ளையன் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

திறந்துமூடும் வகையிலான பாத்ரூம் ஜன்னலை திறந்து, கொள்ளையர்கள் வீட்டினுள் சென்று, 80 சவரன் தங்க நகைகள், பணம், வைரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக, போலீசார் கூறியுள்ளனர். இதே அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 3 மாதங்களுக்கு முன், கொள்ளை நடைபெற்ற நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது, அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments