சுலைமானியின் உடல் ஈரான் கொண்டுவரப்பட்டது

0 988

ஈராக்கில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி சுலைமானியின் உடல், சொந்த நாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது.

பாக்தாத் விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரான் குட்ஸ் படைப்பிரிவு (Quds Force) தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். அவரது உடல், ஈராக்கிலிருந்து ஈரானிற்கு இன்று கொண்டு வரப்பட்டது.

ஈரானின் மேற்கு பகுதியான அவாஸ் (AHVAZ) நகரில் திறந்த வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்ட பெட்டி, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது கருப்புநிற உடை அணிந்துவந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments