பெருவில் எருது ஓட்ட நிகழ்ச்சியில் எருது களேபரம்

0 845

பெருநாட்டில் 2020ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நடைபெற்ற பாரம்பரிய எருது ஓட்ட நிகழ்ச்சியில் எருது ஒன்று, பார்வையாளர்களை முட்டியதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஹூவான்வெலிசியா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண நூற்றுக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது எருது ஒன்று திடீரென பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்தோரை சரமாரியாக முட்டத் தொடங்கியது.

எருதுக்கு பயந்து சாலையோரம் வீட்டில் பதுங்கியிருந்த மக்களையும் எருது விட்டு வைக்கவில்லை. அந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து சரமாரியாக முட்டியது.

இதேபோல் கூடாரம் பகுதிக்குள் நுழைந்தும் அங்கிருந்தோரையும் எருது முட்டியது. எருது முட்டியதில் பலர் தூக்கி வீசப்பட்டும், பலர் கொம்பு குத்துப்பட்டும் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments