ராஜஸ்தானில் மேலும் ஒரு மருத்துவமனையிலும் 10 பச்சிளம் குழந்தைகள் இறப்பு

0 791

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு மருத்துவமனையிலும், ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே அம்மாநிலத்தின் கோட்டா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பண்டி பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாவட்ட துணை ஆட்சியர் அந்த மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வின் போது இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதையடுத்து குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments