போண்டா சாப்பிட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

0 9499

போண்டா  தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சூளைமேடு காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்த கங்காதரனின் மனைவி பத்மாவதி நேற்று தனது தாயுடன் வெளியே சென்று ஐந்து போண்டாக்களை வாங்கி வந்தார். 

வீட்டிற்கு வந்த பத்மாவதி போண்டாவை சாப்பிட்ட போது, அது தொண்டையில் சிக்கி  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்ட அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments