டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

0 835

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஏராளமானோர் வாகனங்களில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தியா கேட், கன்னாட் சர்க்கிள் பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் மாலையில் திரண்டனர். ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் வந்ததால்,  இந்தியா கேட்டை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மிக மெதுவாக அவை ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் எரிச்சலைடைந்த வாகன ஓட்டிகள் பலர், டுவிட்டர் மூலம் டெல்லி போக்குவரத்து காவல்துறையிடம் முறையிட்டனர்.

காவல்துறையினரும் உடனுக்குடன் பதிலளித்து, நெரிசலை தவிர்க்கும் வழிமுறைகளை அறிவுறுத்தினர். பயணிகள் நெரிசல் காரணமாக 5  மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்களும் மாலையில் மூடப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments